Saturday, 23 April 2011

நாய் தொல்லையில் அலறும் ராமநாதபுரம்


ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் முன் அதை சரிசெய்ய அதிகாரிகள் முன்வரவேண்டும். முன்பெல்லாம் பாம்பு கடித்தால் பதறி மருத்துவமனை ஓடிய நிலை இருந்தது. இப்போது நாய் கடித்தாலே நகரத்தை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உயிருக்கு உலை வைக்கும் நோயை தரக்கூடிய நாய்கடியால் உயிர் இழந்தோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்த நிலவரம் அண்டை மாநிலத்தில் நடந்ததில்லை. இங்கிருந்து இரண்டு மணி நேர பயணத்தில் உள்ள மதுரையில் தான் நாய்கடியில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை நாளிதழ்களில் படித்தாவது அதிகாரிகள் உஷாராகி இருக்கலாம். ராமநாதபுரத்தில் அந்த அளவு நாய்கள் தொல்லை உள்ளது. திருடனை பிடிக்க பயன்படும் என்ற பெயரில் தெருநாய்களின் உற்பத்தியை கடந்த ஓராண்டில் இருமடங்காக பெருக்கி உள்ளனர். எங்கு பார்த்தாலும் நாய்கள் கூட்டம் பொதுமக்களை இம்சித்து வருகிறது. முன்பெல்லாம் வீடுகளில் நாய் வளர்க்க அனுமதி பெற வேண்டும். அதை முறையாக பின்பற்றிய வரை எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தது. வழக்கம் போல அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டதால், இங்கு வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பதற்கு பதிலாக நாய்களை வளர்த்துள்ளனர். கருத்தடை செய்கிறோம் என்ற பெயரில், கணிசமான தொகை யை "ஸ்வாக' செய்தது தான் மிச்சம். தற்போதைய நாய்களின் எண்ணிக்கையை பார்த்தால், முன்பை விட அதிக அளவில் நாய்கள் உற்பத்தி ஆகியிருப்பது தெளிவாக தெரிகிறது. அப்படியெனில் இவர்கள் செய்த அறுவை சிகிச்சையின் வெற்றியை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது. இனியாவது பிரயோஜனமான முடிவுகளை மேற்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும். சிறுவர், முதியோரை அச்சுறுத்தும் நாய்களை ஒழிக்க நகராட்சியினர் முன்வர வேண்டும்.

0 comments:

Post a Comment

 
Free Flash TemplatesRiad In FezFree joomla templatesAgence Web MarocMusic Videos OnlineFree Website templateswww.seodesign.usFree Wordpress Themeswww.freethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesSoccer Videos OnlineFree Wordpress ThemesFree CSS Templates Dreamweaver