Sunday, 30 January 2011

டாஸ்மாக் பாராக பள்ளி மைதானம்

முதுகுளத்தூர் அரசு பள்ளி மைதானம் இரவு நேரங்களில் டாஸ்மாக் பாராகமாறி,மது பாட்டில்கள் உடைக்கப்பட்டு அலங்கோலமாய் காட்சி தருவதால் மாணவர்கள் பாதிக்கின்றனர்.முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் கண்மாய்க்குள் விறகு ஏற்ற செல்ல லாரிகள், டிராக்டர்கள் செல்லும் வழியாக பயன்படுத்துவதால் உருக்குலைய துவங்கியது. போதிய பராமரிப்பின்றி , மழை காலங்களில் வாகனங்கள் சென்றதால் விவசாயம் நிலம்போல் குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு மைதானம் பயனில்லாமல் போனதால், புல்வெளிகளிகளின் வளர்ச்சி அதிகமாவதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட மது பிரியர்கள், இரவு நேரங்களில் பாராக உருமாற்றி வருகின்றனர். மது பாட்டில்களும் உடைந்து கிடப்பதால், மைதானத்தை பயன்படுத்தும் மாணவர்கள் காயப்படும் நிலையும் உள்ளது.மாணவர்கள் கூறியதாவது: காம்பவுண்ட் சுவர் இல்லாததாலும், கண்மாய் கரையோரங்களில் தடுப்பு வேலிகள் இல்லாததால் மைதானத்தை இரவு நேர பாராக மாற்றி வருகின்றனர். வாட்ச்மேன் இல்லாததால் அலுவலக பதிவேடுகள்கூட பாதுகாப்பில்லாமல் உள்ளது. இதே நிலை நீடித்தால் தேர்வு காலங்களில் வினாத்தாள்களுக்கு கூட பாதுகாப்பில்லாமல் போய்விடும். பள்ளியில் வகுப்பறை பின்புறம் பேரூராட்சி குப்பைகிடங்கு உள்ளதால், தொற்றுநோய்க்கு ஆளாகும் அபாயம் உள்ளது என்றனர்.

0 comments:

Post a Comment

 
Free Flash TemplatesRiad In FezFree joomla templatesAgence Web MarocMusic Videos OnlineFree Website templateswww.seodesign.usFree Wordpress Themeswww.freethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesSoccer Videos OnlineFree Wordpress ThemesFree CSS Templates Dreamweaver