மகாத்மா காந்தி கொலை வழக்கு - என்.சொக்கன் எழுதி கிழக்கு பதிப்பகத்தால் வெளியாகியிருக்கும் இப்புத்தகம் தேசத் தந்தை காந்தியின் கொலை முயற்சியை விறுவிறுப்பாக எடுத்துரைக்கிறது. தேசப்பிரிவினையிலிருந்து துவங்கி இறுதியாக மகாத்மா கொலை, அதைத் தொடர்ந்து விசாரனை, தூக்கு என்று அனைத்தையும் ஆராய்ந்திருக்கும் இந்நூல் கோட்ஸேவை மட்டுமே பிரதானப்படுத்தி சாவர்க்கரின் முழு சதியையும் மறைக்க முயற்சித்தது போல் அமைந்திருக்கிறது. இறுதியில் சதிகளை தேதிவாரியாக பிற்சேர்கையில் அமைத்தது அருமை. இந்நூலைப் பயன்படுத்தி என்.சொக்கன் ஃபாஸிச பரிவாரங்களை அம்பலப்படுத்தியிருக்கலாம்.
0 comments:
Post a Comment