ராமநாதபுரம் : ராமநாதபுரம் டவுனில் மட்டும் சிபிசக்ரவர்த்தி ஏ.எஸ்.பி.,அதிரடி நடவடிக்கையால் , மூன்று மாதங்களில் வாகனம் தொடர்பான 2 ஆயிரத்து 677 வழக்குகள் பதியப்பட்டு, ஏழு லட்சத்து 11 ஆயிரத்து 300 ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.ராமநாதபுரம் பஜார் ஸ்டேஷனில் பொறுப்பேற்ற சிபிசக்ரவர்த்தி ஏ.எஸ்.பி., தினமும் ஏதாவது ஒரு பகுதியில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்கிறார். ராமநாதபுரம் பகுதியில் போக்குவரத்து தொடர்பாக வாடகை வாகன டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்கள், சொந்த வாகனத்தை வாடகைக்கு ஓட்டுபவர்கள் என அனைவரையும் அழைத்து பேசி,"" சட்டத்திற்கு புறம்பாக யாரும் செயல்பட கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, எச்சரித்து அனுப்பினார். இதன்பின் நடந்த அதிரடி சோதனையில் குடிபோதையில் வாகனங்கள் ஓட்டியது, லைசென்ஸ் இல்லாதது, அதிகபாரம், சொந்த வாகனத்தை வாடகைக்கு ஓட்டியது, சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றியது என, பல தரப்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளார்.இதன் மூலம் கடந்த ஜனவரியில் 379 வழக்குகளில் 99 ஆயிரத்து 500 , பிப்ரவரியில் 905 வழக்குகளில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 700 ,மார்ச்சில் ஆயிரத்து 393 வழக்குகளில் 3 லட்சத்து 90 ஆயிரத்து 150 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ல் மோட்டார் தொடர்பான வழக்குகளில் ஏழு லட்சம் ரூபாய் அபராதமாக வசூல் செய்துள்ளநிலையில், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 7 லட்சத்து 11 ஆயிரத்து 300 ரூபாய் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ராமநாதபுரம் நகரில் மதுபான கடைகளில் நடக்கும் சில்லரை விற்பனை, அத்துமீறல், லாட்ஜ்களில் சூதாட்ட கிளப் நடத்துதல் போன்றவைகள் குறித்தும் அதிரடியாக ரெய்டு நடத்தி ஆங்காகே பல இன்பார்மர்களை நியமித்து, அவர்களிடம் மொபைல் எண்ணை கொடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருவதால், தற்போது டவுன் பகுதியில் ஒரளவு அத்துமீறல் குறைந்து வருகிறது. இவர் விடுப்பில் செல்லும்போது ஆங்காங்கே மீண்டும் அத்துமீறல் தலைதூக்குவது தெரிந்து, மீண்டும் மதுபான பார் உரிமையாளர்களை அழைத்து எச்சரித்துவருகிறார். ஏ.எஸ்.பி.,யின் நடவடிக்கைக்கு அனில்குமார் கிரி எஸ்.பி.,யும் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
Monday, 25 April 2011
3 மாத்தில் ரூ.7 லட்சம் அபராதம் : சிபிசக்ரவர்த்தி ஏ.எஸ்.பி.,அதிரடி
ராமநாதபுரம் : ராமநாதபுரம் டவுனில் மட்டும் சிபிசக்ரவர்த்தி ஏ.எஸ்.பி.,அதிரடி நடவடிக்கையால் , மூன்று மாதங்களில் வாகனம் தொடர்பான 2 ஆயிரத்து 677 வழக்குகள் பதியப்பட்டு, ஏழு லட்சத்து 11 ஆயிரத்து 300 ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.ராமநாதபுரம் பஜார் ஸ்டேஷனில் பொறுப்பேற்ற சிபிசக்ரவர்த்தி ஏ.எஸ்.பி., தினமும் ஏதாவது ஒரு பகுதியில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்கிறார். ராமநாதபுரம் பகுதியில் போக்குவரத்து தொடர்பாக வாடகை வாகன டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்கள், சொந்த வாகனத்தை வாடகைக்கு ஓட்டுபவர்கள் என அனைவரையும் அழைத்து பேசி,"" சட்டத்திற்கு புறம்பாக யாரும் செயல்பட கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, எச்சரித்து அனுப்பினார். இதன்பின் நடந்த அதிரடி சோதனையில் குடிபோதையில் வாகனங்கள் ஓட்டியது, லைசென்ஸ் இல்லாதது, அதிகபாரம், சொந்த வாகனத்தை வாடகைக்கு ஓட்டியது, சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றியது என, பல தரப்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளார்.இதன் மூலம் கடந்த ஜனவரியில் 379 வழக்குகளில் 99 ஆயிரத்து 500 , பிப்ரவரியில் 905 வழக்குகளில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 700 ,மார்ச்சில் ஆயிரத்து 393 வழக்குகளில் 3 லட்சத்து 90 ஆயிரத்து 150 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ல் மோட்டார் தொடர்பான வழக்குகளில் ஏழு லட்சம் ரூபாய் அபராதமாக வசூல் செய்துள்ளநிலையில், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 7 லட்சத்து 11 ஆயிரத்து 300 ரூபாய் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ராமநாதபுரம் நகரில் மதுபான கடைகளில் நடக்கும் சில்லரை விற்பனை, அத்துமீறல், லாட்ஜ்களில் சூதாட்ட கிளப் நடத்துதல் போன்றவைகள் குறித்தும் அதிரடியாக ரெய்டு நடத்தி ஆங்காகே பல இன்பார்மர்களை நியமித்து, அவர்களிடம் மொபைல் எண்ணை கொடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருவதால், தற்போது டவுன் பகுதியில் ஒரளவு அத்துமீறல் குறைந்து வருகிறது. இவர் விடுப்பில் செல்லும்போது ஆங்காங்கே மீண்டும் அத்துமீறல் தலைதூக்குவது தெரிந்து, மீண்டும் மதுபான பார் உரிமையாளர்களை அழைத்து எச்சரித்துவருகிறார். ஏ.எஸ்.பி.,யின் நடவடிக்கைக்கு அனில்குமார் கிரி எஸ்.பி.,யும் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
0 comments:
Post a Comment