ராமநாதபுரம் : ""ராமநாதபுரம் தொகுதி காங்.,வேட்பாளர் ஹசன்அலிக்கு பிரசாரம் செய்வதற்கு வெட்கமாக இருப்பதாக,'' அக்கட்சியினர் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் முகம்மது மக்தும் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹசன்அலி எம்.எல்.ஏ., கடந்த ஐந்தாண்டுகளில் மக்களை சந்திக்கவில்லை. தொகுதி குறைகளையும் கேட்கவும் இல்லை. இது மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காங்., கட்சிக்காக ஒரு உறுப்பினரை கூட சேர்த்தது இல்லை. இலங்கை அதிபர் ராஜபக்சேயின் நண்பரான ஹசன்அலியோடு சேர்ந்து பிரசாரம் செய்ய வெட்கமாக உள்ளது , என, தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment