SDPI - செயல் வீரர்கள் கூட்டம்
ஸோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின்(SDPI) செயல்வீரர்கள் கூட்டம் 16/01/2011 அன்று இராம்நாட் ஆயிர வைசிய காசுக்கடை மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஸோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின்(SDPI) மாவட்ட தலைவர் M.I.நூர் ஜியாவுதீன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பேராசிரியர் லியாக்கத் அலி வரவேற்று பேசினார். மாவட்ட பொதுச்செயலாளர் S.செய்யது இபுறாஹீம் தலைமையுரை நிகழ்த்தினார். ஜனநாயக இந்தியாவில் மலிந்து கிடக்கும் ஊழலை பற்றியும் பிப்ரவரியில் நடக்கவிருக்கும் சென்னை மண்டல மாநாடு பற்றியும் SDPIயின் இராம்நாட் தொகுதி செயலாளர் அ.அப்துல் ஜமில் சிறப்புரையாற்றினார். கட்சிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிளை, தொகுதி, நகர நிர்வாகிகள் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட செயல்வீரர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக SDPIயின் இராம்நாட் நகர தலைவர் ரஃபீக் நன்றியுரைடன் செயல்வீரர்கள் கூட்டம் நிறைவு பெற்றது
0 comments:
Post a Comment