ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் குற்றங்களை தடுத்திட போலீஸ் துறை சார்பில் விழிப்புணர்வு பிரசார நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது.குற்றங்களை தடுத்திட வருமுன் காப்போம் என்ற ரீதியில், பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து, ராமநாதபுரம் எஸ்.பி.,பிரதீப்குமார் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது .இதில் பொது மக்கள் தங்களை காத்துகொள்வது எப்படி என பட்டியலிட்டுள்ளனர்.அதன் விபரம் :செயின் பறிப்பு சம்பவங்களை தவிர்க்க, கழுத்தில் அதிக நகைகளை அணிந்து கொண்டு கூட்ட நெரிசலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.பயணம் செய்யும் போதும் நகையை தவிர்க்க வேண்டும், வித்தியாசமான நபர்கள் அருகில் வந்தால் கவனமாக இருக்க வேண்டும், சந்தேக நபர்கள் தெருவில் சுற்றிதிரிந்தால் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனிற்கு தகவல் தரவேண்டும்.தெருவில் பேன்ட் பிட், கம்பளம், மெத்தை விற்பவர்கள் வந்தால் எங்கிருந்து வருகிறார்கள் என விசாரிக்க வேண்டும், பெண்கள் காலையில் கோலமிடும்போது, வாக்கிங் செல்லும் போது தனித்து இல்லாமல் துணையுடன் செல்ல வேண்டும், வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் பின்வாசலை கண்டிப்பாக மூட வேண்டும் .இரு சக்கர வாகன திருட்டை தவிர்க்க வாகனத்தை நிறுத்தும்போது சைடு லாக் போட வேண்டும், சாவியை மறக்காமல் எடுத்து செல்ல வேண்டும், தெருக்களில் நிறுத்தும் வாகனங்களை செயின் கொண்டு பூட்ட வேண்டும்.பிக்பாக்கெட் திருட்டை தவிர்க்க பஸ்சில் பயணம் செய்யும் போது, பர்சை பெண்கள் கட்டை பையில் போட்டு எடுத்து செல்லக்கூடாது, ஆண்கள் பேன்டின் பின்பாக்கெட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும், கூட்டநெரிசலில் பர்ஸ் தெரியும்படி வைத்து கொள்ளாமல் ஆடையில் மறைத்து வைத்துகொள்ள வேண்டும்.வீடுகளில் திருட்டை தவிர்த்திட அடையாளம் தெரியாத புதிய நபர்கள் வீட்டிற்குள் அனுமதிக்காதீர்,அண்டை வீட்டாரும் நட்புடன் பழக வேண்டும், வீட்டு கதவில் கண்ணால் பார்க்க கூடிய துவாரம் அமைத்து கொள்ள வேண்டும்,வீட்டு டிரைவர், வேலை செய்பவர்களின் குடும்ப விபரம் போட்டோவை வைத்து கொள்ள வேண்டும், நகைகளை லாக்கரில் வைக்க வேண்டும், வங்கிக்கு அதிகளவில் பணம் எடுக்க செல்லும் போது தனியாக செல்லகூடாது, பொது இடங்களில் புதிதாக பழகிய நபரை வீட்டிற்கு அழைத்து செல்லகூடாது.கவனத்தை திசைதிருப்பும்நபர்களிடம் இருந்து காத்து கொள்ள, எச்சில் உமிழ்ந்து துடைப்பது போல், பணத்தை கீழே போட்டு எடுக்க வைத்து ஏமாற்றவது, தங்க நகைகள் சுத்தம் செய்பவர்கள் போல், ஜோதிடர்கள் போல் வருபர்களை அனுமதிக்ககூடாது. இதுபோன்ற பல அறிவுரை களுடன் வீடுகள்தோறும் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
0 comments:
Post a Comment