Thursday, 3 February 2011

மாணவி தற்கொலை..

ராமநாதபுரம் : கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதில், மர்மம் இருப்பதாக கூறி, ராமநாதபுரம் மருத்துவமனையில் உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால், பதட்டம் உருவானது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பரமக்குடி பாம்பூரை சேர்ந்தவர் சுபர்ணா(18). கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாண்டு படித்து வந்த இவர், நேற்று முன்தினம் கல்லூரி விடுதியில் தூக்குபோட்டு, தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் மர்மம்இருப்பதாகவும், இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், வழக்கை திசை திருப்ப பார்த்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் உறவினர்கள் திரண்டனர். இதனால் மருத்துவமனை பகுதியில் பதட்டமான நிலை உருவாக, கண்ணீர் புகை குண்டுகளுடன் ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டனர் . கல்லூரி சார்பில் யாரும் வராததால் தாசில்தார் ரவீந்திரன், நாகராஜன் ஏ.டி.எஸ்.பி., ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவுக்கு வரவில்லை. பின் மாணவி உடலை மாலை நான்கு மணிக்குமேல் உறவினர்கள் வாங்கி சென்றனர். கல்லூரிகளுக்கு விடுமுறை: நேற்று காலை மாணவ,மாணவிகளை ஏற்றி வந்த கீழக்கரை சதக் இன்ஜினியரிங் கல்லூரி பஸ்களை ஆர்.எஸ்.மடை அருகே சிலர் வழி மறித்தனர். போலீசார் பேச்சு வார்த்தைக்கு பின் பஸ்களில் வந்த மாணவ, மாணவிகள் வீடுகளுக்கு அதே பஸ்சில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். முகம்மது சதக் அறக்கட்டளை கீழ் இயங்கும் சதக் பாலிடெக்னிக் கல்லூரி, சதக் இன்ஜினியரிங் கல்லூரி, செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நேற்று திறக்கப்படவில்லை. இறந்த மாணவிக்கு அனுதாபம் தெரிவித்து விடுமுறை அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கல்லூரி முன் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

0 comments:

Post a Comment

 
Free Flash TemplatesRiad In FezFree joomla templatesAgence Web MarocMusic Videos OnlineFree Website templateswww.seodesign.usFree Wordpress Themeswww.freethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesSoccer Videos OnlineFree Wordpress ThemesFree CSS Templates Dreamweaver