பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆச்சார்யா மடம் அருகில் 15/02/2011 அன்று மாலை 6 மணியளவில் சர்வாதிகார ஆட்சியை சவுக்கடி கொடுத்து புரட்சியின் மூலம் எகிப்தில் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சியை வீழ்த்திய எகிப்து மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தும், தற்போது நிலவி வரும் இரானுவ ஆட்சியை அகற்றி ஜனநாயக ஆட்சியை மலரச்செய்ய இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் மு.செய்யது ஹாலிது த்லைமை தாங்கினார். ஷோஸியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியாவின்(SDPI) மாநில செயற்குழு உறுப்பினர் B.அப்துல் ஹமீது, SDPIன் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் M.I.நூர் ஜியாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் சிறப்புரையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் S.K.அஸ்கர் அலி நிகழ்த்தினார். இறுதியாக சகோதரர் அப்பாஸ் அலி நன்றியுரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நான்.
0 comments:
Post a Comment