பரமக்குடி : பரமக்குடியில் எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வி.ஏ.ஓ.,க்கள் தொடர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள பல ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். பரமக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமையில், வட்டத்தலைவர் பூப்பாண்டி கிராம உதவியாளர்கள் மாவட்ட செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் கோவிந்தன் வரவேற்றார். சர்வேயர் மாநில துணைத்தலைவர் காந்தி, சேவியர் மற்றும் வி.ஏ.ஓ.,க்கள் பலர் பங்கேற்றனர். வட்ட பொருளாளர் பாண்டி நன்றி கூறினார்.
செய்தி : தினமலர்
0 comments:
Post a Comment