மண்டபம்:மண்டபம் ரோட்டில் சிந்திய பேச்சாளை கழிவால்"108 ' ஆம்புலன்ஸ்கவிழ்ந்தது.தடைசெய்யப்பட்ட இரட்டைமடி தொழில் மீன்துறை அதிகாரிகளின் ஆசியுடன் மீண்டும் தொடங்கியுள்ளது.இரட்டைமடியில் பேச்சாளைகள் டன் கணக்கில் பிடிபடுகின்றன.பேச்சாளைகள் டிராக்டர் மற்றும் லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன.இதனால் ரோடுகளில் பேச்சாளையின் கழிவுகள் சிந்துகின்றன.கழிவுகள் எண்ணெய் போன்று இருக்கும்.கழிவுகளால் ரோடுகளில் செல்லும் இருசக்கர வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் நிலை குழைந்து கீழே விழுகின்றன.கடந்த ஒரு வாரத்திற்குள் 10 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகன ஒட்டிகள் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.நேற்று அவசர அழைப்புக்கு வரும் "108 'ஆம்புலன்ஸ் பேச்சாளை கழிவால் மண்டபம் கேம்ப் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது.ஊழியர்கள் காயத்துடன் உயிர் தப்பினர்.தேசிய நெடுஞ்சாலையில் பேச்சாளை கழிவினால் விபத்துகள் மட்டுமல்லாது துர்நாற்றமும் வீசுகிறது.
செய்தி : தினமலர்
0 comments:
Post a Comment