ராமநாதபுரம் : தேர்தலை காரணம்காண்பித்து ரேஷன் கடைகளில் ஆய்வு செய்வது முற்றிலும் குறைந்துவிட்டதால் பல கடைகளில் எடையளவில் ஏமாற்றுவதும் தரமற்ற பொருள்களை வினியோகிப்பதாலும் பொது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவித்த நாளிலேயே தேர்தல் விதிமுறை என தேர்தல் கமிஷனை காரணம் காண்பித்து ரேஷன் கார்டு வினியோகத்திலிருந்து பெயர் மாற்றம், நீக்கல், புதிய ரேஷன் கார்டு வழங்குதல் என அனைத்திற்கும் அதிகாரிகள் தடாபோட்டனர். இதற்குதான் தடா என்றால் பொருட்கள் வாங்குவதற்கும் தடா போட்டது போல் மக்களை சத்தமின்றி படாய்படுத்த துவங்கிவிட்டனர் ரேஷன்கடைக்காரர்கள். ரேஷன் கடையில் இரண்டு கிலோ சீனி வாங்கினால் ஒன்றரை கிலோ மட்டுமே உள்ளது.அந்தளவு எடையை எலக்ட்ரானிக் தராசில் துல்லியமாக நிறுத்து தருகின்றனராம். எடை கல்லில்தான் தில்லுமுல்லு நடந்தது என்றால் தற்போது எலக்ட்ரானிக் தராசிலும் தில்லுமுல்லு கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். இதுதவிர கோதுமை, சீனி போன்ற பொருட்கள் மிகுந்த தூசியுடனும், சீனி ஈரத்தன்மையுடனும் தரமற்ற நிலையில் வினியோகிக்கின்றனர்.இதையெல்லாம் மக்கள் கேட்டால், "இதுதான் இருக்கிறது இஷ்டம் என்றால் வாங்கிகொள்ளுங்கள் இல்லையேல் தேர்தல் தடை முடிந்தபின் வாருங்கள்' என கூறுகின்றனர். தேர்தலுக்கும் ரேஷன் பொருள் வினியோகத்திற்கும் சம்மந்தமே இல்லாதநிலையில், கொடுப்பதை வாங்கி கொள்வோம் என அச்சத்துடன் பொது மக்கள் வாங்கி செல்கின்றனர். இதைபற்றியெல்லாம் அதிகாரிகள் ஆய்வு செய்யாததால் ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஆண்டுதோறும் தேர்தல் வந்தால் நமக்கு நன்றாக இருக்குமே என்ற நினைப்பில் உள்ளனர். வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் திறக்கும் கடை, ரேஷன் பொருள் வாங்க வரும் மக்களிடம் கடன்காரர்கள் போல் பாவிப்பது போன்றவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Monday, 25 April 2011
தேர்தலால் ரேஷன் கடைகளில் கண்காணிப்பு, ஆய்வு இல்லை : எடையளவு குறைவு, தரமற்ற பொருள் வினியோகம்
ராமநாதபுரம் : தேர்தலை காரணம்காண்பித்து ரேஷன் கடைகளில் ஆய்வு செய்வது முற்றிலும் குறைந்துவிட்டதால் பல கடைகளில் எடையளவில் ஏமாற்றுவதும் தரமற்ற பொருள்களை வினியோகிப்பதாலும் பொது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவித்த நாளிலேயே தேர்தல் விதிமுறை என தேர்தல் கமிஷனை காரணம் காண்பித்து ரேஷன் கார்டு வினியோகத்திலிருந்து பெயர் மாற்றம், நீக்கல், புதிய ரேஷன் கார்டு வழங்குதல் என அனைத்திற்கும் அதிகாரிகள் தடாபோட்டனர். இதற்குதான் தடா என்றால் பொருட்கள் வாங்குவதற்கும் தடா போட்டது போல் மக்களை சத்தமின்றி படாய்படுத்த துவங்கிவிட்டனர் ரேஷன்கடைக்காரர்கள். ரேஷன் கடையில் இரண்டு கிலோ சீனி வாங்கினால் ஒன்றரை கிலோ மட்டுமே உள்ளது.அந்தளவு எடையை எலக்ட்ரானிக் தராசில் துல்லியமாக நிறுத்து தருகின்றனராம். எடை கல்லில்தான் தில்லுமுல்லு நடந்தது என்றால் தற்போது எலக்ட்ரானிக் தராசிலும் தில்லுமுல்லு கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். இதுதவிர கோதுமை, சீனி போன்ற பொருட்கள் மிகுந்த தூசியுடனும், சீனி ஈரத்தன்மையுடனும் தரமற்ற நிலையில் வினியோகிக்கின்றனர்.இதையெல்லாம் மக்கள் கேட்டால், "இதுதான் இருக்கிறது இஷ்டம் என்றால் வாங்கிகொள்ளுங்கள் இல்லையேல் தேர்தல் தடை முடிந்தபின் வாருங்கள்' என கூறுகின்றனர். தேர்தலுக்கும் ரேஷன் பொருள் வினியோகத்திற்கும் சம்மந்தமே இல்லாதநிலையில், கொடுப்பதை வாங்கி கொள்வோம் என அச்சத்துடன் பொது மக்கள் வாங்கி செல்கின்றனர். இதைபற்றியெல்லாம் அதிகாரிகள் ஆய்வு செய்யாததால் ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஆண்டுதோறும் தேர்தல் வந்தால் நமக்கு நன்றாக இருக்குமே என்ற நினைப்பில் உள்ளனர். வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் திறக்கும் கடை, ரேஷன் பொருள் வாங்க வரும் மக்களிடம் கடன்காரர்கள் போல் பாவிப்பது போன்றவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 comments:
Post a Comment