Tuesday, 18 January 2011

சோஸியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(SDPI) புதுவலசை கிளை


சோஸியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(SDPI) புதுவலசை கிளை சார்பாக 14/01/2011 அன்று மாலை 4:45 மணியளவில் புதுவலசை பேருந்து நிலையம் அருகில் SDPI கொடியேற்று நிகழ்ச்சி புதுவலசை SDPI கிளை தலைவர் N.அப்ரார் அஹ்மது தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புதுவலசை SDPI நகர் தலைவர் M.பஜல் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார். முகவை நகர செயலாளர் M.நவாஸ் கான், புதுவலசை SDPI நகர் பொருளாளர் ஹாஜி.J.அப்துல் ரசாக், புதுவலசை கிளை செயலாளர் A.அஸ்வர் ரஹ்மான், புதுவலசை கிளை இணை செயலாளர் T.அப்துல் ஒபூர், புதுவலசை SDPI நகர் மன்ற உறுப்பினர் V.மீரான் ஒலி, திருவாடனை தொகுதி கமிட்டி உறுப்பினர் H.சலீம் அஹ்மது, பனைக்குளம் கிளை தலைவர் A.முஹம்மது ரியாசுதீன், சித்தார்க்கோட்டை கிளை தலைவர் M.சபிக்குர் ரஹ்மான், வாழுர் கிளை தலைவர் A.ரஹ்மத்துல்லாஹ்,அழகன்குளம் கிளை தலைவர் S.மனாஸிர் ரஹ்மான், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சோஸியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(SDPI)வின் முகவை மாவட்ட தலைவர் M.I.நூர் ஜியாவுதீன் கொடியேற்றி சிறப்பித்தார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற் குழு உறுப்பினர் B.அப்துல் ஹமீது SDPIயின் செயல்பாடுகள் மற்றும் பிப்ரவரி 20ல் SDPI நடத்தவிருக்கும் சென்னை மண்டல மாநாடு குறித்து சிறப்புரை நிகழ்த்தினார். இந்த கொடியேற்று நிகழ்ச்சிக்கு புதுவலசை ஜமாத் நிர்வாகிகள், பொது மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இறுதியாக புதுவலசை நகர் செயலாளர் S.முபாரக் அலி நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவுப்பெற்றது.

0 comments:

Post a Comment

 
Free Flash TemplatesRiad In FezFree joomla templatesAgence Web MarocMusic Videos OnlineFree Website templateswww.seodesign.usFree Wordpress Themeswww.freethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesSoccer Videos OnlineFree Wordpress ThemesFree CSS Templates Dreamweaver