Tuesday, 15 February 2011

ஊராட்சி தலைவருக்கு தீண்டாமை விருது..

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட கொளுந்துரையில் அனைத்து மத, சாதியினரும் வசித்து வருகின்றனர். இங்கு கிராம திருவிழாக்களின்போதும், மற்ற மத விழாக்களையும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து நடத்தி வந்தனர். இதனால் இங்கு பாகுபாடுகள் இல்லாமல் அனைத்து தரப்பினரும் உறவினர்கள்போல் வாழ்ந்து சாதி, மத பிரச்னைகள் இல்லாமலும், தீண்டாமையை அறவே ஒழித்து கட்டுப்பாடுள்ள கிராமமாக நடைமுறைப்படுத்திய கொளுந்துரை ஊராட்சி தலைவர் ராசாத்திகோவிந்தராஜனுக்கு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஹரிகரன் தீண்டாமை ஒழிப்பு கிராம விருதினையும் வழங்கி பாராட்டினார். விருது பெற்ற ஊராட்சி தலைவருக்கு பாராட்டு விழா நடத்த கிராம மக்கள் தீர்மானித்துள்ளனர்.

செய்தி : தினமலர்

0 comments:

Post a Comment

 
Free Flash TemplatesRiad In FezFree joomla templatesAgence Web MarocMusic Videos OnlineFree Website templateswww.seodesign.usFree Wordpress Themeswww.freethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesSoccer Videos OnlineFree Wordpress ThemesFree CSS Templates Dreamweaver