Friday, 18 February 2011

நம்பிக்கை இழக்கும் தகவல் உரிமை சட்டம்


ராமநாதபுரம் : தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெறுவதில், ஆறு மாதங்களாக இழுத்தடிக்கப்படுவதால், அச்சட்டத்தின் மீது பொது மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தகவல் பெறும் உரிமை சட்டம் 2005ல் துவங்கப்பட்டு,பல்வேறு துறைகளில் தேவையான தகவல்களை இச்சட்டத்தின் கீழ் பெற வழிசெய்யப்பட்டது. தமிழகத்தில் பல துறைகளில் எளிதில் தகவல்களை பெறமுடியாத நிலை உள்ளது. இதனால் துறைகளில் ஏற்படும் தவறுகளை கண்டுபிடிக்கமுடியாத சூழலும், அதேநேரத்தில் தவறு செய்யும் துறை அதிகாரிகளுக்கு துணைபோகும் விதமாக தகவல் பெறும் உரிமை ஆணையம் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தகவல் பெறும் உரிமை சட்டத்தில் 30 தினங்களுக்குள் பதில் தராவிட்டால், தினம் சூ 250 அபராதம் விதிக்கப்படும் என உள்ளது. நடைமுறையில் இதை யாரும் கண்டுகொள்வதில்லை. தகவல் பெறும் உரிமை ஆணையமும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை காப்பாற்றும் விதமாக, "மனுதாரருக்கு தேவையான தகவல்களை கொடுத்து உதவுங்கள்,' என, கெஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டணத்தை சேர்ந்த செய்யது இபுராகிம் என்பவர் 2010 ஆக.,4ல் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்து இதுவரை பதில் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலர், கலெக்டர், தகவல் பெறும் ஆணையம் என அனைத்திற்கும் தபால் அனுப்பியும் முறையான நடவடிக்கை இல்லை. இதேநிலை இன்னும் பலருக்கும் ஏற்பட்டுள்ளது என்பதுதான் வேதனையான தகவல்.

0 comments:

Post a Comment

 
Free Flash TemplatesRiad In FezFree joomla templatesAgence Web MarocMusic Videos OnlineFree Website templateswww.seodesign.usFree Wordpress Themeswww.freethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesSoccer Videos OnlineFree Wordpress ThemesFree CSS Templates Dreamweaver