கீழக்கரை: கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சுமையாவிற்கு தேசிய சிறுபான்மை கல்வி நிறுவன ஆணையத்தின் சார்பில் சிறுபான்மை பெண்கள் கல்வி பணியில் ஆற்றிய சேவையை பாராட்டி, சென்னையில் விருது வழங்கப்பட்டது.செயலாளர் காலித் ஏகே புகாரி,தாளாளர் டாக்டர் ரஹ்மத்துனிசா,யூசுப் சுலைஹா டிரஸ்ட் நிறுவனர் குர்ரத் ஜமிலா,கிரஸண்ட் குரூப்ஸ் இயக்குனர் டாக்டர் ஷரீபா,சீதக்காதி அறக்கட்டளை துனை பொது மேலாளர் சேக்தாவுத்,துணை முதல்வர் நாதிரா பானு மற்றும் துறை தலைவர்கள்,பேராசிரியர்கள்,விரிவுரையாளர்கள் வாழ்த்தினர். இதை தொடர்ந்து தாசிம்பீவி கல்லூரியில் மாணவிகளுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சிநடந்தது. கல்லூரி முதல்வர் சுமையா தலைமை வகித்தார். மாணவி ஷாநாஸ் கிராஅத் ஓதினார். முன்னாள் ரயில்வே அமைச்சர் ஜாபர் ஷெரீப் கலந்து கொண்டுபேசியதாவது:அனைத்து துறைகளிலும் இந்திய பெண்களின் நிலைப்பாடு உயர்ந்து உலக நாடுகளில் தலை நிமிர செய்துள்ளது.பெண்கள் மேலும் கல்வியில் தன்னிறைவு பெற வேண்டும்.வளர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் கூட, இங்கு பெண்களிடம் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சியை கண்டு இந்தியாவில் கல்வி கற்று வருகின்றனர். பெண்களின் முன்னேற்றத்தால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்,என்றார். மாணவி ஹூசைனியா நன்றி கூறினார். மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை தென்பிராந்திய ஆய்வாளர் முகம்மது சித்திக், முகம்மது ரபீக்,மோகன்,நசீர் பாட்சா,கல்லூரி துணை முதல்வர் முனைவர் நாதிரா பானு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Sunday, 6 February 2011
தாசீம்பீவி கல்லூரி முதல்வருக்கு விருது
கீழக்கரை: கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சுமையாவிற்கு தேசிய சிறுபான்மை கல்வி நிறுவன ஆணையத்தின் சார்பில் சிறுபான்மை பெண்கள் கல்வி பணியில் ஆற்றிய சேவையை பாராட்டி, சென்னையில் விருது வழங்கப்பட்டது.செயலாளர் காலித் ஏகே புகாரி,தாளாளர் டாக்டர் ரஹ்மத்துனிசா,யூசுப் சுலைஹா டிரஸ்ட் நிறுவனர் குர்ரத் ஜமிலா,கிரஸண்ட் குரூப்ஸ் இயக்குனர் டாக்டர் ஷரீபா,சீதக்காதி அறக்கட்டளை துனை பொது மேலாளர் சேக்தாவுத்,துணை முதல்வர் நாதிரா பானு மற்றும் துறை தலைவர்கள்,பேராசிரியர்கள்,விரிவுரையாளர்கள் வாழ்த்தினர். இதை தொடர்ந்து தாசிம்பீவி கல்லூரியில் மாணவிகளுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சிநடந்தது. கல்லூரி முதல்வர் சுமையா தலைமை வகித்தார். மாணவி ஷாநாஸ் கிராஅத் ஓதினார். முன்னாள் ரயில்வே அமைச்சர் ஜாபர் ஷெரீப் கலந்து கொண்டுபேசியதாவது:அனைத்து துறைகளிலும் இந்திய பெண்களின் நிலைப்பாடு உயர்ந்து உலக நாடுகளில் தலை நிமிர செய்துள்ளது.பெண்கள் மேலும் கல்வியில் தன்னிறைவு பெற வேண்டும்.வளர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் கூட, இங்கு பெண்களிடம் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சியை கண்டு இந்தியாவில் கல்வி கற்று வருகின்றனர். பெண்களின் முன்னேற்றத்தால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்,என்றார். மாணவி ஹூசைனியா நன்றி கூறினார். மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை தென்பிராந்திய ஆய்வாளர் முகம்மது சித்திக், முகம்மது ரபீக்,மோகன்,நசீர் பாட்சா,கல்லூரி துணை முதல்வர் முனைவர் நாதிரா பானு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment