பெரியபட்டினம் : பெரியபட்டினம் அரசு மேல்நிலை பள்ளியில், உயர்அழுத்த மின் வயர்களால் , மாணவர்களுக்கு பேராபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் பெற்றோர்கள் உள்ளனர்.பெரியபட்டினம் அரசு மேல்நிலை பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவர்கள் தலைக்கு மேல் உள்ள அபாயத்தை அறியாமல், விளையாடுவதும், மைதானத்தில் அமர்ந்து மதிய உணவை உண்பதுமாக உள்ளனர். இளம்கன்று பயமறியாது என்றாலும், பெற்றோர்களோ ," விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் தினமும் கடவுளை வேண்டி ' வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இந்த உயர்அழுத்த மின் வயர்கள் ஆங்காங்கே அறுந்தநிலையில், பலமுறை ஒட்டுபோட்டு அப்படியே விட்டு உள்ளனர். பள்ளி வளாகத்தில் மாணவர்கள் விளையாடும் போதோ, நடந்து செல்லும்போதோ, வயர் அறுந்து விழுந்தால், உயர் அழுத்தம் காரணமாக பள்ளி மாணவர்களின் உயிர்பலி கொத்து கொத்தாக நடக்கும் அபாயம் உள்ளது.
பள்ளியின் நடுவே செல்லும் மின்வயர்களால் பேராபத்து ஏற்படும் அபாயம் உள்ளதை தெரிந்தும், மின்வாரிய அதிகாரிகளே, "உரிய கட்டணத்தை செலுத்தினால்தான் அகற்றுவோம்,' என்ற, பிடிவாதத்தில் உள்ளனர். பேராபத்து நடந்தால் தாங்கள் தப்பித்து கொள்ளும் வகையில், கல்வித்துறையினரும் அவ்வப்போது ஏதாவது ஒரு கடிதத்தை மட்டும் எழுதி தயார்நிலையில் வைத்துகொள்கின்றனர்.ஆனால் மாணவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாததை கல்வி துறையோ, மின்வாரியத்தினரோ கண்டுகொள்ளாமல் உள்ளது வேதனையான விஷயம்தான்.
இது தொடர்பாக அப்பகுதியினரின் புலம்பல்கள்: ஹசன்அலி(PFI,மாவட்ட செயற்குழு உறுப்பினர்): கடந்த பத்தாண்டுகளாக இதை அரசுக்கு தெரிவித்து மாணவர்களை காப்பாற்றுங்கள் என போராடிவருகிறோம். அரசு அதிகாரிகளோ செவிசாய்க்க மறுக்கின்றனர். திடீரென அறுந்துவிழுந்துவிட்டால் பேராபத்து என்பதால் அடிக்கடி இங்குள்ள மின்கம்பத்தை கண்காணித்து கொண்டே இருக்கிறோம்.அஸ்கர்(SDPI கிளை தலைவர்): அமைச்சர், கலெக்டர், மின்வாரிய அதிகாரி என அனைவரிடமும் புகார் கொடுத்தும் பயனில்லை. 1.15 லட்சம்ரூபாய் பணம் செலுத்தினால்தான் மாற்றுவோம் என பிடிவதாம் பிடிக்கின்றனர். பேராபத்து நடந்தபின் தமிழக அளவில் அதிகாரிகள் முகாமிட்டு கேள்வி மட்டும் கேட்பர். வருமுன்காப்போம் ரீதியில், விபத்து நடக்கும் முன் மின் வயர்களை மாற்ற மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும்.சீனிசெய்யது அலி(SDPI,நகர தலைவர்,பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகி): மனு கொடுத்தால் அவ்வப்போதுஅதிகாரிகள் வந்து பார்ப்பதோடு சரி .தீர்வு மட்டும் இல்லை. மனு கொடுத்து நாங்களே அலுத்துபோய்விட்டோம். சேகுஜலாலுதீன்(SDPI,இராமநாதபுரம் தொகுதி பொருளாளர்): மின்சார அபாயத்தை தொடர்ந்து கூறியதால், ஒருமுறை இடையில் ஒரு மின்கம்பத்தை மட்டும் இணைத்துவிட்டு, இனி விழாது என கூறி செல்கின்றனர். இதை பள்ளிக்கு வெளியே ரோடு வழியாக கொண்டு செல்ல வேண்டும்.
0 comments:
Post a Comment