முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் த.மு.மு.க., கிளை கூட்டம் நகர தலைவர் அமீர்கான் தலைமையிலும், ம.ம.க., மாவட்ட செயலாளர் ஜபருல்லாகான் முன்னிலையிலும் நடந்தது. அ.தி.மு.க., கூட்டணியில் த.மு.மு.க., இடம்பெற்றுள்ளதால் முழு ஆதரவுடன் வெற்றி பெற பணியாற்றவேண்டும் எனவும், இலங்கை ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்ட சிவகுமாருக்கு இரங்கல் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் அஜீஸ்கனி, த.மு.மு.க., ஒன்றிய தலைவர் வாவாராவுத்தர், செயலாளர் அமிருல்ஹக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment