Thursday, 3 February 2011

மனு வாங்க எம்.எல்.ஏ., "பிகு' : ஆர்வமாக வந்தவர்கள் திகைப்பு

ராமநாதபுரம் : மனு அளிக்க வந்தவர்களிடம் அறிவுரை வழங்கிய ஹசன்அலி எம்.எல்.ஏ., வின் செயல் பொதுமக்களை எரிச்சலடைய செய்தது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மண்டபம் அருகே சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் நிலம் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு கேட்டு மனு அளிக்க வந்தனர். அந்த சமயத்தில் மாவட்ட ஊராட்சி குழுதலைவர் ரவிச்சந்திரராமவன்னியை சந்திக்க ஹசன்அலி எம்.எல்.ஏ., வந்தார். வழக்கத்துக்கு மாறாக எம்.எல்.ஏ.,வை கண்ட மக்கள், அவரிடம் முறையிட கூட்டமாக ஓடினர். இதை சற்றும் எதிர்பாராத எம்.எல்.ஏ.,விடம், தங்கள் நிலை குறித்து பொதுமக்கள் விளக்கி மனு அளித்தனர். வழக்கமான தனது பாணியில், "" இப்படி பார்த்த இடத்தில் எல்லாம் பாத்திகா(பிரார்தனை) ஓதக்கூடாது, என்னை பார்த்து மனு கொடுக்க வேண்டியது தானே,'' என்றார். மனு அளிக்க வந்தவர்களுக்கு நீண்ட அறிவுரை வழங்கிய எம்.எல்.ஏ., ""சம்மந்தப்பட்டவர்களிடம் பேசி தீர்வுக்கு வழிகாண்கிறேன்,'' என்றபடி, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

0 comments:

Post a Comment

 
Free Flash TemplatesRiad In FezFree joomla templatesAgence Web MarocMusic Videos OnlineFree Website templateswww.seodesign.usFree Wordpress Themeswww.freethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesSoccer Videos OnlineFree Wordpress ThemesFree CSS Templates Dreamweaver