திருவாடானை:திருவாடானை தொகுதி தி.மு.க., விற்கு ஒதுக்கபட்டதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.திருவாடானை தொகுதியில் 1971 தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றது. 1989 தேர்தலில் தோல்வியை சந்தித்தது. தற்போது மூன்றாவது முறையாக இத் தொகுதியில் தி.மு.க., போட்டியிடுகிறது. அமைச்சர் சுப. தங்கவேலன் இத் தொகுதியில் போட்டியிடுவது தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்., கோட்டையாக இருந்து வரும் இத் தொகுதியில் ஏற்கனவே தி.மு.க., அ.தி.மு.க., தலா ஒரு தடவை வெற்றி பெற்ற நிலையில்,மூன்றாவது முறையாக காங்., அல்லாத ஒரு கட்சி எம்.எல்.ஏ.,வை தேர்ந்தெடுக்க வாக்காளர்கள் தயாராக உள்ளனர்.
1 comments:
Padangal. illaiya?
Post a Comment