கீழக்கரை : கீழக்கரை,ஏர்வாடி,சேதுக்கரை உள்ளிட்ட கடல் பகுதியில் நாட்டுப்படகுகளில் சட்டத்திற்கு புறம்பாக மக்கள் தீவுகளுக்கு சென்று வருகின்றனர்.கண்காணிக்க வேண்டிய வனத்துறை அலுவலர்கள் உறக்கத்தில் உள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் 26ல் கீழக்கரை அருகே பெரியபட்டினத்திலிருந்து சட்ட விரோதமாக முல்லித்தீவிற்கு சுற்றுலா சென்ற போது படகு கவிழ்ந்து 16 பேர் பலியாயினர்.இதை தொடர்ந்து , ""மீன்பிடி படகுகளில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ,''என, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டது. சில மாதங்கள் அறிவிப்பை கடைப்பிடித்த நிலையில்,தற்போது வனத்துறையினரின் மறைமுக ஆதரவுடன் மக்கள் மீன்பிடி படகுகளில் தீவுகளுக்கு செல்கின்றனர். பாதுகாப்பற்ற படகு சவாரியினால் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்க,கலெக்டர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
0 comments:
Post a Comment