ராமநாதபுரம்:"கொடுத்ததை பெற்றவர்கள் சரியாக ஓட்டளித்தார்களா,' என்ற, கவலை சில வேட்பாளர்கள் மத்தியில் எழுந்துள்ளதால் ஆழ்ந்த கவலையில் உள்ளனர். 2011 பிறந்ததும் புத்தாண்டை விட பலரும் தேர்தல் ஆண்டு தான் நினைவுக்கு வந்தது. கடந்த ஆண்டுகளில் களை கட்டிய இடைத்தேர்தலின் பார்முலாவே இந்நிலைக்கு காரணம். ஆட்சியை கைப்பற்ற அத்தியாவசியமான தேர்தல் என்பதால், இடைத்தேர்தலை விட இரட்டிப்பாக கொட்டும் என பலரும் ஆவலாய் இருந்தனர். அரசியல் கட்சியினர் உட்பட. "எங்கே போகிறது ஜனநாயகம்?,' என, சமூக ஆர்வலர்கள் கவலைப்பட்ட நேரத்தில், திருப்பு முனையாக வந்தது தேர்தல் கமிஷனின் கிடுக்குபிடி நடவடிக்கைகள். அறிவிப்பு வெளியான மறுநாளிலிருந்து கறார் நடவடிக்கைள் கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதனால் கட்சியினர் நிற்கவும் முடியாமல், நடக்கவும் முடியாமல் திணறத்தொடங்கினர். தொட்டதுக்கு எல்லாம் வழக்குகள் என்ற பாலிசி, இம்முறை நன்றாக "வொர்க் அவுட்' ஆனது. கண்ணில் எண்ணெய் ஊற்றி நடந்த கண்காணிப்பு பணியிலும் சில கட்சிகள் குசும்புகளை அரங்கேற்றாமல் இல்லை. இருப்பினும் நினைத்த அளவுக்கு பணப்பட்டுவாடா செய்ய முடியவில்லை. அதிக பட்சமாக 300 ரூபாய் கொடுத்திருந்தாலே பெரிய விசயம் தான். மாவட்டத்தின் நான்கு தொகுதி நிலவரப்படி அதிக பட்சமாக பரமக்குடியில் தான் ஓட்டுக்கு சில இடங்களில் 500 வரை தரப்பட்டுள்ளது. குறைந்த பட்சமாக திருவாடானை தொகுதியில் தான் ஓட்டுக்கு 100 ரூபாய் தரப்பட்டுள்ளது. முதுகுளத்தூர், ராமநாதபுரம் தொகுதியில் 150, 200 ரூபாய் என, இடத்திற்கு ஏற்றார் போல தொகை வினியோகம் மாறி உள்ளது. இருப்பினும் இவை எல்லாம் வெட்டவெளிச்சமாக வழங்கப்பட்ட பணம் அல்ல. அதிகாரிகளுக்கு பயந்து ஓடி ஒழிந்து வழங்கிய பணமாகும். இன்னும் சொல்லப்போனால், சில இடங்களில் எந்த கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதை சொல்லாமலே பணம் வினியோகம் நடந்துள்ளது. அந்த அளவுக்கு அதிகாரிகள் மீது பயத்துடன் பணப்பட்டுவாடா நடந்துள்ளது. சில வேட்பாளர்கள் பணத்தை கொடுத்துவிட்டோம், ஓட்டு கிடைத்துவிடும் என்ற மிதப்பில் உள்ளனர். உண்மையில் நிலைமை இங்கு வேறுவிதமாக உள்ளது. பல இடங்களில் பணம் முழுமையாக போய் சேரவில்லை. சேர்ந்த இடங்களில் கொடுத்த அளவு பணம் வரவில்லை. "ரிஸ்க்' எடுத்து நடந்த பணவினியோகம், தங்களை "ரஸ்க்' சாப்பிடும் நிலைக்கு தள்ளிவிடுமோ என்ற கவலை வேட்பாளரிடத்தில் தொற்றி உள்ளது. ஓட்டு பதிவுக்கு பின் வேட்பாளர்கள் மூலம் ஒவ்வொரு தொகுதியின் பகுதியில் உள்ள ஆதரவாளர்களை வைத்து நடத்திய கணிப்பில், பணம் வாங்கிய பலரும் மாறி ஓட்டளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் வேட்பாளர்கள் சில உறக்கம் இன்றி தவித்து வருகின்றனர்.
Monday, 25 April 2011
வாங்கியவர்கள் போட்டார்களா வேட்பாளர்களுக்குமண்ணை தூவி நடந்த பட்டுவாடா
ராமநாதபுரம்:"கொடுத்ததை பெற்றவர்கள் சரியாக ஓட்டளித்தார்களா,' என்ற, கவலை சில வேட்பாளர்கள் மத்தியில் எழுந்துள்ளதால் ஆழ்ந்த கவலையில் உள்ளனர். 2011 பிறந்ததும் புத்தாண்டை விட பலரும் தேர்தல் ஆண்டு தான் நினைவுக்கு வந்தது. கடந்த ஆண்டுகளில் களை கட்டிய இடைத்தேர்தலின் பார்முலாவே இந்நிலைக்கு காரணம். ஆட்சியை கைப்பற்ற அத்தியாவசியமான தேர்தல் என்பதால், இடைத்தேர்தலை விட இரட்டிப்பாக கொட்டும் என பலரும் ஆவலாய் இருந்தனர். அரசியல் கட்சியினர் உட்பட. "எங்கே போகிறது ஜனநாயகம்?,' என, சமூக ஆர்வலர்கள் கவலைப்பட்ட நேரத்தில், திருப்பு முனையாக வந்தது தேர்தல் கமிஷனின் கிடுக்குபிடி நடவடிக்கைகள். அறிவிப்பு வெளியான மறுநாளிலிருந்து கறார் நடவடிக்கைள் கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதனால் கட்சியினர் நிற்கவும் முடியாமல், நடக்கவும் முடியாமல் திணறத்தொடங்கினர். தொட்டதுக்கு எல்லாம் வழக்குகள் என்ற பாலிசி, இம்முறை நன்றாக "வொர்க் அவுட்' ஆனது. கண்ணில் எண்ணெய் ஊற்றி நடந்த கண்காணிப்பு பணியிலும் சில கட்சிகள் குசும்புகளை அரங்கேற்றாமல் இல்லை. இருப்பினும் நினைத்த அளவுக்கு பணப்பட்டுவாடா செய்ய முடியவில்லை. அதிக பட்சமாக 300 ரூபாய் கொடுத்திருந்தாலே பெரிய விசயம் தான். மாவட்டத்தின் நான்கு தொகுதி நிலவரப்படி அதிக பட்சமாக பரமக்குடியில் தான் ஓட்டுக்கு சில இடங்களில் 500 வரை தரப்பட்டுள்ளது. குறைந்த பட்சமாக திருவாடானை தொகுதியில் தான் ஓட்டுக்கு 100 ரூபாய் தரப்பட்டுள்ளது. முதுகுளத்தூர், ராமநாதபுரம் தொகுதியில் 150, 200 ரூபாய் என, இடத்திற்கு ஏற்றார் போல தொகை வினியோகம் மாறி உள்ளது. இருப்பினும் இவை எல்லாம் வெட்டவெளிச்சமாக வழங்கப்பட்ட பணம் அல்ல. அதிகாரிகளுக்கு பயந்து ஓடி ஒழிந்து வழங்கிய பணமாகும். இன்னும் சொல்லப்போனால், சில இடங்களில் எந்த கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதை சொல்லாமலே பணம் வினியோகம் நடந்துள்ளது. அந்த அளவுக்கு அதிகாரிகள் மீது பயத்துடன் பணப்பட்டுவாடா நடந்துள்ளது. சில வேட்பாளர்கள் பணத்தை கொடுத்துவிட்டோம், ஓட்டு கிடைத்துவிடும் என்ற மிதப்பில் உள்ளனர். உண்மையில் நிலைமை இங்கு வேறுவிதமாக உள்ளது. பல இடங்களில் பணம் முழுமையாக போய் சேரவில்லை. சேர்ந்த இடங்களில் கொடுத்த அளவு பணம் வரவில்லை. "ரிஸ்க்' எடுத்து நடந்த பணவினியோகம், தங்களை "ரஸ்க்' சாப்பிடும் நிலைக்கு தள்ளிவிடுமோ என்ற கவலை வேட்பாளரிடத்தில் தொற்றி உள்ளது. ஓட்டு பதிவுக்கு பின் வேட்பாளர்கள் மூலம் ஒவ்வொரு தொகுதியின் பகுதியில் உள்ள ஆதரவாளர்களை வைத்து நடத்திய கணிப்பில், பணம் வாங்கிய பலரும் மாறி ஓட்டளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் வேட்பாளர்கள் சில உறக்கம் இன்றி தவித்து வருகின்றனர்.
1 comments:
பணத்தை பற்றி கவலை கொள்ளும் அன்பு உள்ளங்களே.............. யார் யார் பட்டுவாடா செய்தார்கள் என்பதை நம்மை எல்ல்லாம் படைத்த இறைவன் அறிவான்.......... அவன் கேட்கும் தருணத்தில் கையோ அல்லாது இரட்டை மெழுகுவர்த்தியோ பதில் சொல்லியே தீர வேண்டும்.
நகரின் நன்மை விரும்பி.
Post a Comment